உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு


உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு
x

தர்மபுரியில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி, ஜூலை.12-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி உறுதி மொழி வாசிக்க அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், நலப் பணிகள்இணை இயக்குனர் (பொறுப்பு) ராஜேஷ் கண்ணா, காச நோய் சிகிச்சை பிரிவு துணை இயக்குனர் ராஜ்குமார், குடும்ப நல துணை இயக்குனர் மலர்விழி, தொழுநோய் சிகிச்சை பிரிவு துணை இயக்குனர் புவனேஸ்வரி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story