ராமேசுவரம் நகரை தூய்மைப்படுத்த உறுதிமொழி ஏற்பு


ராமேசுவரம் நகரை தூய்மைப்படுத்த உறுதிமொழி ஏற்பு
x

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் நகரை தூய்மைப்படுத்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் வாசல் முன்பு நேற்று நகராட்சி சார்பில் உலக சுற்றுலா தின விழா நடைபெற்றது. கிழக்கு வாசல் பகுதியில் கோவிலுக்கு வந்த வட மாநில சுற்றுலா பயணிகளை நகரசபை தலைவர் நாசர்கான் மாலை அணிவித்து வரவேற்றார்.

பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராமேசுவரம் கோவில் வாசல் முன்பு நகரசபை தலைவர் நாசர்கான், நகரசபை ஆணையாளர் கண்ணன் ஆகியோர் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தனர். நகரை தூய்மைப்படுத்துவது குறித்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், பணி ஆய்வாளர் ஜெகதீசன், மாவட்ட சுற்றுலா அதிகாரி அருண் பிரசாத், மற்றும் கவுன்சிலர்கள் சத்யா, பிரபு குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தின் முன்பு நடந்த நிகழ்ச்சியில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பலருக்கு சுற்றுலாத்துறை சார்பில் சங்கு மாலை அணிவித்து வரவேற்பும் வழங்கப்பட்டது..

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அதிகாரி அருண் பிரசாத், நகர சபை ஆணையாளர் கண்ணன், மணிமண்டப பொறுப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story