குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதியை குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்ட அரசுத்துறை அலுவலர்கள் 'இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன், என்ற உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

இதில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், தொழிலாளர் நலத்துறை உதவி இயக்குநர் சதீஷ்குமார் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story