வரும் 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு


வரும் 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
x

வரும் 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 31-ந் தேதி முடிவடைந்தது. இதையடுத்து தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.

இந்நிலையில், பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே வெளியிடப்படுகிறது.


Next Story