பிளஸ்-1 மாணவன் தற்கொலை

பிளஸ்-1 மாணவன் தற்கொலை செய்துகொண்டாா்
திருப்புவனம்
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த லாடனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முரளிகண்ணன். இவரது மகன் ரூபன் (வயது 16). இவர் திருப்புவனத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் ரூபன், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அங்கு சென்று ரூபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





