பஸ்சை முந்தி சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததில் பிளஸ்-2 மாணவன் பலி; தோவாளையில் பரிதாபம்


பஸ்சை முந்தி சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததில் பிளஸ்-2 மாணவன் பலி; தோவாளையில் பரிதாபம்
x

தோவாளையில் அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததில் பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தோவாளையில் அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததில் பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிளஸ்-2 மாணவன்

நெல்லை மாவட்டம் பணகுடி ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் பால்துரை. இவருடைய மனைவி செல்லத்தாய். இவர்களுடைய மகன் தங்கசுடர் மார்பின் (வயது 18), குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை தங்கசுடர் மார்பின் நாகர்கோவிலில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு நண்பரை பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டார். தோவாளை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது முன்னால் பயணிகளை ஏற்றியபடி அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை முந்திச் செல்ல தங்கசுடர் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

விபத்தில் பலி

அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் அவருடைய கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தாறுமாறாக ஓடியதில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து தங்கசுடர் மார்பின் படுகாயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story