கோவை மத்திய சிறையில் போக்சோ கைதி திடீர் சாவு

கோவை மத்திய சிறையில் போக்சோ கைதி திடீரென இறந்தார்.
கோவை
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் கருப்பன் (வயது 72). இவர் கடந்த 2016-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து சிறை ஊழியர்கள் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





