போக்சோவில் தொழிலாளி கைது


போக்சோவில் தொழிலாளி கைது
x

10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதான 10-ம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது பெற்றோர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவியை சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது, மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அவரது பெற்றோர் அதிர்ர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே மாணவிக்கு குழந்தை பிறந்து சில மணிநேரத்திேலயே இறந்து விட்டது. இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் சமூகநலத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டியை சேர்ந்த தொழிலாளி உதயராயர் (வயது 24) என்பவர், மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உதயராயரை போலீசார் கைது செய்தனர்.


Next Story