போக்சோவில் தொழிலாளி கைது

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மதன்குமார் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர், பிளஸ்-2 படிக்கும் 16 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்தார். பின்னர் அவரிடம் திருமணம் செய்வதாகக்கூறி நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி 2 மாதம் கர்ப்பமானார். இந்த விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் ெகாடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





