திருப்பரங்குன்றம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி

திருப்பரங்குன்றம் அருகே வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்து உள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பாரப்பத்தி அருகே சுமார் 3 வயது மதிக்கதக்க ஒரு ஆண் புள்ளிமான் இன்று காலையில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் திடீரென்று புள்ளிமான் மீது மோதியது.
அதில் தலையில் பலத்த காயமடைந்த மான் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை புதூர் வனச்சரக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





