விஷம் குடித்த காய்கறி வியாபாரி சாவு

காவேரிப்பாக்கத்தில் விஷம் குடித்த காய்கறி வியாபாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காவேரிப்பாக்கம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 67). சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக இவருக்கு குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கோவிந்தன் கடந்த 5-ந்் தேதி விஷம் குடித்துள்ளார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் நேற்று கோவிந்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





