அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு..!


அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு..!
x
தினத்தந்தி 2 Sep 2022 3:26 AM GMT (Updated: 2 Sep 2022 4:29 AM GMT)

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையில், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையர் தலைமையில் 80 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல்துறை வாகனங்கள் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


Next Story