கடையை நடத்துவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்கு


கடையை நடத்துவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்கு
x

முத்தையாபுரத்தில் கடையை நடத்துவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ளமுத்தையாபுரம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் தனுஷ்கோடி இவரது மகன் பிரபாகரன். இவருக்கு சொந்தமான கடையை அதே பகுதியை சேர்ந்த கணேசன் மனைவி லெட்சுமி என்பவருக்கு ஒத்திக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடையை நடத்துவதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் இரண்டு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த லெட்சுமி, அவரது மகள் வசந்தி மற்றும் முத்துலெட்சுமி ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் 2 தரப்பையும் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story