கடலூர் அருகே வாலிபர் திடீர் சாவு போலீசார் விசாரணை


கடலூர் அருகே வாலிபர் திடீர் சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 March 2023 6:45 PM GMT (Updated: 9 March 2023 6:45 PM GMT)

கடலூர் அருகே வாலிபர் திடீரென உயிாிழந்தாா். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர்

ரெட்டிச்சாவடி,

கடலூர் அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் பிரதாப் (வயது 28). உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரதாப்பை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே பிரதாப் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது தாய் பவானி, ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story