தூக்கில் தொழிலாளி பிணம்

தூக்கில் தொழிலாளி பிணமாக தொங்கினார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அரசூர் ஊராட்சி மணலகரம் கிராமம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஆனந்தராஜ் (வயது32). விவசாய தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு விரைந்து சென்று ஆனந்தராஜ் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தூக்கில் பிணமாக தொங்கிய ஆனந்தராஜின் 2 கைகளும் பின்பக்கமாக கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. இதனால் இவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






