வாணியம்பாடியில் போலீசார் வாகன சோதனை


வாணியம்பாடியில் போலீசார் வாகன சோதனை
x

ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்க வாணியம்பாடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் உள்ள எந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வழியாக கொள்ளையர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு எளிதாக சென்று விடும் நிலை உள்ளதால்,

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வாணியம்பாடிைய அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோட்டில் திருப்பத்தூர் சாலையிலும், அதேபோல் வாணியம்பாடியில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், நாகராஜன் மற்றும் போலீசார் அவ்வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள், கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


Next Story