இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஒரத்தநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
ஒரத்தநாடு;
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் அறிவிப்பினை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஒரத்தநாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story