இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் தமிழக அரசின் கொள்கை முடிவை கைவிடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளராக ராமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில குழு உறுப்பினர் ராஜமோகன் ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை பெறும் உரிமை சட்டத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் தமிழக அரசின் கொள்கை முடிவை கைவிட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story