பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதால் ஈரோடு ரெயில்- பஸ் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்


பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதால் ஈரோடு ரெயில்- பஸ் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
x

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதால் ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதால் ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடர்பு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (சனிக்கிழமை) போகி பண்டிகையும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாட்டு பொங்கல், வருகிற 17-ந்தேதி காணும் பொங்கல் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.

இதையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாடும் வகையில் சிறப்பு ரெயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே அனைத்து ரெயில்களிலும் முன்பதிவுகள் முடிவடைந்து விட்டன. இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பிவிட்டன.

அலைமோதிய பயணிகள் கூட்டம்

இந்த நிலையில் நேற்று ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் கட்டினர். நேற்று அதிகாலை முதலே ஈரோடு ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டனர். இதனால் ஈரோடு வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

இதேபோல் ஈரோடு பஸ் நிலையத்திலும் நேற்று இரவு பயணிகள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகைக்காக விடப்பட்டு உள்ள சிறப்பு பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். ரெயில் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.



Next Story