பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை


பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை
x
தினத்தந்தி 26 July 2023 7:00 PM GMT (Updated: 26 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள திருஞான சம்பந்தர் மடாலயத்தில் நேற்று முன்தினம் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுந்தரர் தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெற்றது. சுந்தரமூர்த்திசாமி மற்றும் நால்வர் பெருமக்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story