பாலப்பட்டி கதிர்மலையில் 108 சங்கு பூஜை


பாலப்பட்டி கதிர்மலையில் 108 சங்கு பூஜை
x
தினத்தந்தி 2 Jun 2023 7:00 PM GMT (Updated: 2 Jun 2023 7:01 PM GMT)
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்ககவசம் சாத்தப்பட்டு விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல் மோகனூர் அடுத்த பாலப்பட்டி கதிர்மலையில் வைகாசி விசாகத்தையொட்டி 108 சங்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story