கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினர் சுவரொட்டிகள் சேலத்தில் பரபரப்பு


கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினர் சுவரொட்டிகள் சேலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 4 July 2023 8:38 PM GMT (Updated: 5 July 2023 7:50 AM GMT)

கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினர் சுவரொட்டிகள் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்

சேலம்

அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் ரவி உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் அந்த உத்தரவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்த செயலை கண்டித்து தி.மு.க. தரப்பில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. அந்த வகையில் சேலத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி என்ற பெயரில் நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

அதில் கிண்டியாரே தயாரா? ஒன்றிய பாஜக அரசில் உள்ள 44 சதவீதம் அமைச்சர்கள் கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட கடும் குற்றவழக்குகளை சந்தித்து வருகிறார்கள். இவர்களை பதவியிலிருந்து விலக்கச்சொல்லி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவாரா ஆர்.என்.ரவி என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story