ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களுடன் போஸ்டர்கள்


ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களுடன் போஸ்டர்கள்
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறையில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களுடன் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களுடன் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி கடத்தல்

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தினந்தோறும் வாகன சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் மயிலாடுதுறை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியம் தலைமையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைஎடுத்து வருகின்றனர்.

தொலைபேசி எண்களுடன் போஸ்டர்கள்

தற்போது ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது தகவல்கள் தெரிவிக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட இலவச தொலைபேசி எண் 1800 599 5950 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மயிலாடுதுறை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இலவச தொலைபேசி எண்ணுடன் போஸ்டர்கள் பொதுமக்கள் பார்வையில் படும் பகுதிகளான பஸ் நிலையம், ரேஷன் கடைகள், தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஓட்டி விழிப்புணர்வு செய்து வருகின்றனர். மேலும் ரேஷன் பொருட்கள் கடத்தல் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றும் மயிலாடுதுறை மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story