உயிரிழந்த மாணவி பிரேத பரிசோதனை..! கொலையா..? தற்கொலையா..? போலீசார் சொன்ன தகவல்


உயிரிழந்த மாணவி பிரேத பரிசோதனை..! கொலையா..? தற்கொலையா..? போலீசார் சொன்ன தகவல்
x
தினத்தந்தி 26 July 2022 5:31 AM GMT (Updated: 26 July 2022 5:40 AM GMT)

திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் பள்ளியின் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது.

திருவள்ளூர் :

திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த கீழசேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. அந்த பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சக மாணவிகள் விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று மாணவி சரளாவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மாணவியின் திடீர் மரணம் தொடர்பாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாணவி சரளாவின் பிரேத பரிசோதனை அண்ணன் சரவணன் முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கருதி பிரேத பரிசோதனை நடைபெறும் திருவள்ளூர் அரசு மருத்துவமனை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Next Story