மாவட்ட அளவிலான கேரம் போட்டி ஒத்திவைப்பு


மாவட்ட அளவிலான கேரம் போட்டி ஒத்திவைப்பு
x

மாவட்ட அளவிலான கேரம் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூரில் 2021-22-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி பல்வேறு பிரிவுகளில் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற இருந்தது. இந்நிலையில் தற்போது சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற இருப்பதால், இந்த மாபெரும் போட்டி நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் கேரம் போட்டியினை நடத்திட ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story