கோழித்தீவனத்தை பரிசோதனைக்கு பின்னர் பயன்படுத்த வேண்டும்ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்


கோழித்தீவனத்தை பரிசோதனைக்கு பின்னர் பயன்படுத்த வேண்டும்ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 3 March 2023 7:00 PM GMT (Updated: 3 March 2023 7:00 PM GMT)
நாமக்கல்

கோழித்தீவனத்தில் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

மழைக்கு வாய்ப்பு இல்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 4 நாட்கள் வானம் தெளிவாக காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 60.8 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 4 கி.மீட்டர், 4 கி.மீட்டர், 6 கி.மீட்டர், 8 கி.மீட்டர் வேகத்தில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் கோடைகாலங்களில் வெப்ப அயற்சியை குறைக்க கால்நடைகள் குடிக்கும் தண்ணீரில் சமையல் சோடா உப்பு, எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிர் சத்துக்களை கலந்து அளிக்கலாம்.

இறக்கை அழுகல் நோய்

இதேபோல் கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டத்தில் கோழிகள் பெரும்பாலும் இறக்கை அழுகல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளன. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோ காக்கஸ் மற்றும் ஈகோலை கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.

மேலும் வரும் வாரங்களில் பகல் நேர வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதால், கோழிகள் வெப்ப அயற்சிக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க தெளிப்பான் உபயோகிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story