கோழிப்பண்ணையாளர்கள்வெள்ளை கழிச்சல் நோய்க்கு ஊநீர் பரிசோதனை செய்ய வேண்டும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்


கோழிப்பண்ணையாளர்கள்வெள்ளை கழிச்சல் நோய்க்கு ஊநீர் பரிசோதனை செய்ய வேண்டும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 9 Jun 2023 7:00 PM GMT (Updated: 10 Jun 2023 5:24 AM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணையாளர்கள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு ஊநீர் பரிசோதனை செய்ய வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று 3 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 8 மி.மீட்டரும், 13 மற்றும் 14-ந் தேதிகளில் 16 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

இன்று முதல் 5 நாட்களுக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இன்று, நாளை மற்றும் 13-ந் தேதி தென்மேற்கு திசையில் இருந்தும், நாளை மறுநாள் மேற்கு திசையில் இருந்தும், 14-ந் தேதி தெற்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.

வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 70, 70, 70, 70, 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும் இருக்கும்.

லேசான மழைக்கு வாய்ப்பு

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெள்ளை கழிச்சல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே பண்ணையாளர்கள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு தேவையான எதிர்ப்பு சக்தி உள்ளதா? என ஊநீர் பரிசோதனை செய்து, அதற்கேற்ப தடுப்பூசி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story