மலையாண்டி கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

மலையாண்டி கோவிலில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.
பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி மலையாண்டி கோவில் நகரத்தார்கள் சார்பாக மலையாண்டி கோவில் மலை ஊரணியை சுற்றி ஏராளமான நகரத்தார்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பவுர்ணமி கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கோவிலைச்சுற்றி 3 முறை கிரிவலம் வந்து பின்பு மலையாண்டி கோவில் மலைமேல் உள்ள அம்மனை தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு நகரத்தார்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





