திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 7 Jan 2023 8:30 PM GMT (Updated: 7 Jan 2023 8:30 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் நிறுத்தம்

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியபட்டி புதூர், முனியபிள்ளைபட்டி, அழுக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து, கொண்டமநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, வெள்ளையம்பட்டி, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த நல்லமனார்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதையொட்டி குளத்தூர், சூடாமணிப்பட்டி, காலனம்பட்டி, புலியமரத்துப்பட்டி, நாயக்கனூர், நல்லமனார்கோட்டை, கொசவப்பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம், எஸ்.ஜி.பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை திண்டுக்கல் மின்சார வாரிய (வடக்கு) அதிகாரிகள் தெரிவித்தனர்.

கன்னிவாடி

கன்னிவாடியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கன்னிவாடி பேரூராட்சி பகுதிகள், பண்ணைப்பட்டி, சுரக்காய்பட்டி, தர்மத்துப்பட்டி, சக்கரகவுண்டன்சாலை, வெள்ளமரத்துபட்டி, கீழதிப்பம்பட்டி, மேலதிப்பம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, தோனிமலை, ஸ்ரீராமபுரம், போலியமனூர், அரசமரத்துபட்டி, குள்ளம்பட்டி, ராமலிங்கம்பட்டி, கட்டசின்னாம்பட்டி, பழைய கன்னிவாடி, குரும்பபட்டி, கோம்பை, ராஜாபுதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கன்னிவாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தாமரைப்பாடி மற்றும் அய்யலூர் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனாங்கோட்டை, முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரியகோட்டை, அய்யலூர், குருந்தம்பட்டி, தங்கம்மாபட்டி, வளவிசெட்டிபட்டி, வடுகபட்டி, மாமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

நத்தம் அருகே எல்.வலையபட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story