திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்


திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மின்தடை

செந்துறை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி செந்துறை, குரும்பபட்டி, களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, மாமரத்துபட்டி, ரெங்கையன்சேர்வைகாரன்பட்டி, பெரியூர்பட்டி, திருநூத்துப்பட்டி, நல்லபிச்சன்பட்டி, ஒத்தக்கடை, சரளைபட்டி, கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி, பிள்ளையார்நத்தம், மாதவநாயக்கன்பட்டி, கோசுகுறிச்சி, கம்பிளியம்பட்டி, மங்களப்பட்டி, சிரங்காட்டூப்பட்டி, சின்னராசிபுரம், மணக்காட்டூர், அடைக்கனூர், தொண்டபுரி, குடகிப்பட்டி, மந்தகுளத்துப்பட்டி, சுக்காம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கொசவப்பட்டி, செங்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கொசவபட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டிபட்டி, கோணப்பட்டி, நத்தம்வாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, தவசிமடை, விராலிப்பட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, குரும்பப்பட்டி, கவராயபட்டி, கூவனூத்து மற்றும் செங்குறிச்சி, ராஜக்காப்பட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, எஸ்.குரும்பப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திண்டுக்கல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

குஜிலியம்பாறை

குஜிலியம்பாறை அருகே வள்ளிபட்டி, சத்திரப்பட்டி மற்றும் சின்னுலுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அம்மாபட்டி, ராமகிரி, மல்லபுரம், குஜிலியம்பாறை, இலுப்பபட்டி, புளியம்பட்டி, சி.சி.சி.குவாரி, உக்குவார்பட்டி, வாணிக்கரை, கூம்பூர், பள்ளபட்டி, அழகாபுரி, சத்திரப்பட்டி, சேர்வைகாரன்பட்டி, கரிக்காலி, பல்லாநத்தம், தாதாநாயக்கனூர், இடையபட்டி, காளப்பட்டி, பூசாரிபட்டி, திருமக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை குஜிலியம்பாறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிச்சை தெரிவித்துள்ளார்.


Next Story