திருப்புவனம் மின்தடையால் பொதுமக்கள் அவதி

திருப்புவனம் பகுதியில் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
திருப்புவனம்
திருப்புவனம் பகுதியில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தற்சமயம் அக்னி நட்சத்திரம் நடைபெறுவதால் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்தடை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





