நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தம்


நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x

வளையப்பட்டி பகுதியில் நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளைமறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர், அரூர்மேடு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.


Next Story