கருப்பூர், நங்கவள்ளி பகுதிகளில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


கருப்பூர், நங்கவள்ளி பகுதிகளில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x

கருப்பூர், நங்கவள்ளி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சேலம்

சேலம்

கருப்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கர செட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ்நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர், நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

இதேபோல், நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று ஓமலூர் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story