எரிச்சநத்தம் பகுதியில் நாளை மின்தடை


எரிச்சநத்தம் பகுதியில்  நாளை மின்தடை
x

எரிச்சநத்தம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி, கிருஷ்ணம நாயக்கன்பட்டி, அம்மாபட்டி, வடுகப்பட்டி, பாறைப்பட்டி, ஜாரி உசிலம்பட்டி, செங்குளம், சல்வார்பட்டி, ஐ மீனாட்சிபுரம், முருகனேரி, கரிசல்குளம், அக்கனாபுரம், சல்வார்பட்டி, கோட்டையூர், கீழக்கோட்டையூர், இலந்தைகுளம், அழகாபுரி, கோவிந்தநல்லூர், ஆயர்தர்மம், சுரைக்காய்பட்டி, சுப்புலாபுரம், கொண்டையம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் முரளிதரன் கூறினார்.


Next Story