கண்ணங்குடியில் 6-ந் தேதி மின்தடை
கண்ணங்குடியில் 6-ந் தேதி மின்தடை ஏற்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.
சிவகங்கை
தேவகோட்டை
தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி துணை மின் நிலையத்தில் 6-ந் தேதி (ெவள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே, அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், மு.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களூர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story