திருவெறும்பூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்


திருவெறும்பூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x

திருவெறும்பூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திருச்சி பெருநகர் கிழக்கு மன்னார்புரம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நவல்பட்டு, சோழமாதேவி, புதுத்தெரு, திருவெறும்பூர் தொழிற்பேட்டை, திருவெறும்பூர், டி-நகர், வேங்கூர், மலைக்கோவில், பிரகாஷ்நகர், போலீஸ் காலனி, பர்மாகாலனி, அண்ணாநகர், காவேரிநகர், சோழமாநகர், நேருநகர், கும்பக்குடி, பூலாங்குடி, பழங்கனாங்குடி, பாரத்நகர் 100 அடிரோடு, சூரியூர், காந்தலூர், குண்டூர், எம்.ஐ.இ.டி. ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story