உத்தமபாளையம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


உத்தமபாளையம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x

உத்தமபாளையம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது

தேனி

உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், மல்லிங்காபுரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், காமயகவுண்டன்பட்டி, ஆணைமலையன்பட்டி, அணைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்தார்.


Next Story