வாளாடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


வாளாடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

வாளாடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லால்குடி இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ெதரிவித்துள்ளதாவது:-

வாளாடி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் நகர், கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி, ஆங்கரை (சரவணாநகர், தேவிநகர், கைலாஸ்நகர்) ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story