நாளை மறுநாள் மின்நிறுத்தம்

லாலாபேட்டை, சிப்காட், அம்மூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
லாலாபேட்டை, சிப்காட், அம்மூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த முகுந்தராயபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை லாலாபேட்டை, தக்காம்பாளையம், தெங்கால், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், பேஸ்-3, சிப்காட், அம்மூர், வேலம், கல்மேல்குப்பம், கிருஷ்ணாவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்படும்.
இந்த தகவலை ராணிப்பேட்டை மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற் பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






