நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:46 PM GMT)

நயினார்கோவில், வாலிநோக்கம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

மின்சாரம் நிறுத்தம்

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பகுதியில் நாளை(சனிக்கிழமை) மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, நாளை காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை நயினார்கோவில், வல்லம், சிறகிக்கோட்டை, பகைவென்றி, கள்ளியடினேந்தல், அக்கிரமேசி, பாண்டியூர், அரசடிவண்டல், எஸ்.வி.மங்களம், கொளுவூர், கங்கைகொண்டான், அ.கச்சான், உதயகுடி, நகரம், அரியான்கோட்டை, வாதவனேரி, கொடிக்குளம், மணக்குடி, ஆட்டாங்குடி, கொட்டக்குடி, சத்திரக்குடி, கொடிக்குளம், முத்துவயல், காமன்கோட்டை, மென்னந்தி, செவ்வூர், கிழக்கோட்டை, பொட்டிதட்டி, மஞ்சூர், அரியனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்தார்.

வாலிநோக்கம்

வாலிநோக்கம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிக்கல், கீழச்செல்வனூர், மேலச்செல்வனூர், கிழக்கிடாரம், மேலக்கிடாரம், காவாகுளம், கொத்தங்குளம், சிறைக்குளம், பன்னந்தை, தத்தங்குடி, மறவாய்க்குடி, சேரந்தை, திருவரங்கை, கிருஷ்ணாபுரம், ஆய்க்குடி, வாலிநோக்கம், தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன பகுதிகள், தனியார் உப்பு நிறுவன பகுதிகள் மற்றும் இறால் பண்ணைகள் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.


Next Story