அன்னவாசல், குன்றாண்டார்கோவில் பகுதிகளில் நாளை மின்தடை


அன்னவாசல், குன்றாண்டார்கோவில் பகுதிகளில் நாளை மின்தடை
x

அன்னவாசல், குன்றாண்டார்கோவில் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

நாளை மின்தடை

அன்னவாசல், அண்ணாபண்ணை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைெபற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அன்னவாசல் பேரூராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி, வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலுர், காரசூராம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

ஒடுகம்பட்டி, வாழமங்களம்

குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், குன்றாண்டார்கோவில் தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உலகத்தான் பட்டி, உடையாளிப்பட்டி, ராக்கத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்களம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.


Next Story