குளத்தூர், சூரியூர் பகுதிகளில் நாளை மின்தடை


குளத்தூர், சூரியூர் பகுதிகளில் நாளை மின்தடை
x

குளத்தூர், சூரியூர் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

நாளை மின்தடை

கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்ஸாண்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அம்மாசத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், குளத்தூர், இளையாவயல், நாஞ்சூர், பிரதாம்பாள்புரம், கிருஷ்ணபாரப்பட்டி, சத்தியமங்கலம், முத்துக்காடு, காவேரி நகர், திருமலை ராயபுரம், உப்பிலிய குடி, விளத்துப்பட்டி, ஒடுக்கூர், நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

சூரியூர், ஆலங்குடி...

வடுகப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீதப்பட்டி, வளதாடிபட்டி, சித்தாம்பூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று வடுகப்பட்டி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story