முசிறி, அரியமங்கலம், பொன்மலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


முசிறி, அரியமங்கலம், பொன்மலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

முசிறி, அரியமங்கலம், பொன்மலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

முசிறி:

முசிறியில் உள்ள துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாைள (சனிக்கிழமை) நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான முசிறி சிங்காரச்சோலை, பார்வதிபுரம், புதிய பஸ் நிலையம், திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன் காலனி, ஹவுசிங் யூனிட், அந்தரப்பட்டி, தொப்பலாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சி பட்டி, சிந்தம்பட்டி, கருப்பனாம்பட்டி, மணமேடு, அழகரை, கோடியம்பாளையம், சீனிவாசநல்லூர், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலகல்கண்டார் கோட்டை, கீழகல்கண்டார் கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு (ஒரு பகுதி), அடைக்கல அன்னைநகர், சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மன்னார்புரம் இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.


Next Story