கந்தர்வகோட்டை, குன்றாண்டார்கோவில் பகுதிகளில் இன்று மின்தடை


கந்தர்வகோட்டை, குன்றாண்டார்கோவில் பகுதிகளில் இன்று மின்தடை
x

கந்தர்வகோட்டை, குன்றாண்டார்கோவில் பகுதிகளில் இன்று மின்தடை விதிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்களகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாலை, சொக்கநாதப்பட்டி, காட்டு நாவல், மட்டையன்பட்டி, மங்கலத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிபட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவன்தான் பட்டி, வீரடிபட்டி, புதுப்பட்டி, நம்பிரான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகபட்டி, பிசானத்தூர், துருசு பட்டி, மெய்குடி பட்டி, ஆத்தியடி பட்டி, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

குன்றாண்டார்கோவில் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, இராக்கதாம் பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


Next Story