விராலிமலை, மாத்தூர், ஆவூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்


விராலிமலை, மாத்தூர், ஆவூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
x

விராலிமலை, மாத்தூர், ஆவூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை

ஆவூர்:

கீரனூர் மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெரும் மாத்தூர், மாத்தூர் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், குண்டூர் பர்மாகாலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், ஆவூர், ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி, செங்களாக்குடி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

விராலிமலை, வடுகப்பட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் விராலிமலை நகர்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கோமங்கலம், கல்குடி, பொருவாய், அத்திப்பள்ளம், நம்பம்பட்டி, ராஜாளிபட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, செட்டியபட்டி, தேன்கனியூர், கொடும்பாளூர், மாதுராபட்டி, ராமகவுண்டம்பட்டி, விராலூர், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராபட்டி, கட்டகுடி, பாப்பாவயல், வடுகப்பட்டியில் உள்ள அனைத்து கம்பெனிகள், வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூர் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என விராலிமலை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story