செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா


செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா
x

திருச்செந்தூர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பூவனநாத சுவாமி உடனுறை செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூவன நாத சாமி மற்றும் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை் நடத்தப்பட்டது. விழாவில் கோவில் நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் பிரதோஷ விழா நேற்று மாலையில் நடந்தது. விழாவையொட்டி சங்கரலிங்கசாமி, மற்றும் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story