செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா


செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா
x

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாத சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நேற்று மாலையில் நடந்தது. இதையொட்டி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

பிரதோஷ விழாவை யொட்டி பூவனநாதருக்கும், நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரேஸ்வரி அம்மன் புற்று கோவிலிலும், மந்தித் தோப்பு துளசிங்க நகர் பூமாதேவி கோவிலிலும் பிரதோஷ விழா நடத்தப் பட்டது.


Next Story