செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா


செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 3 Feb 2023 6:46 PM GMT)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதர் சுவாமி கோவிலில் நேற்று மாலையில் பிரதோஷ விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பூவனநாத சுவாமி மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் நேற்று மாலையில் பிரதோஷ விழா நடந்தது. விழாவில் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story