செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா


செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:45 PM GMT)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி பூவனாதசுவாமிக்கும், நந்தியம் பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

இதேபோல் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story