செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா


செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா
x
தினத்தந்தி 17 May 2023 6:45 PM GMT (Updated: 17 May 2023 6:46 PM GMT)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று பிரதோஷ விழாவை யொட்டி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பூவனநாத சுவாமி, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.


Next Story